Search blog.co.uk

Posts archive for: July, 2008
  • Interview with Maharandan

    He sees a bright future for Tamil

    Maharandan lets his pen do all the talking

    Interviewer : Deepa H Ramakrishnan
    --------------------------------------------

    Maharandan has been chosen as a member of the general council of the Sahitya Akademi to represent Tamil from January 1, 2008. He will hold the post for five years

    PUDUCHERRY: His answers to most questions are silent nods, while a smile lights up his face now and then.

    This silent man lets his pen do the talking, and writing has led Maharandan alias I. Ganapathy to a position in the prestigious Sahitya Akademi. He has been chosen as a member of the general council of the Akademi to represent Tamil from January 1, 2008, and he will hold the post for five years.

    “Tamil as a language refreshes itself time and again. Its recognition as a Classical Language has paved the way for the language to gain more glory across the globe. With more young blood falling in love with the language and poets and literary luminaries guiding them, I see a very bright future for Tamil,” says Maharandan, who is already charting out the things to do during his tenure.

    “Tamil blogs needed”

    Since Tamil is already on the worldwide web he wants to have blogs for writers and poets that could open new channels of discussion among them.

    “There are hundreds of blogs in Tamil on the Internet, but we need to make more of them. This would also help rope in youngsters, who are net savvy into writing and appreciating the language,” he says.

    The editor of Vallinam, a quarterly literary magazine that strives to popularize subaltern studies in Tamil, Maharandan has made it his life mission to work for the marginalised, with literature and social sciences as his tools.

    “I feel that if power must reach those that are outside its purview such writings are necessary. We need people to read about such people in an anthropological view. We publish works of experts in the respective subjects,” he says.

    Vallinam Publications has brought out four books on the marginalised, including the ‘Nomads in Tamil Nadu’, ‘Vilimbu Nilai Makkal Vazhakaarugal’ (Folklore of Marginalized – An Ethnographic Study), ‘Maanidaviyal Kotpaadugal’ (Theories in Anthropology) and ‘Aadhi Maruthuvar.

    “We are now in the process of bringing out books on Tamil Kuravar and washermen. Both are ethnographic studies.”

    Maharandan, who works as a PRO in the Department of Information and Publicity, made his foray into writing Tamil poetry in the 1990s.

    His first publication was a collection of modern Tamil poems titled ‘Mann Kudhirai’ in 1995.

    He has also penned short stories that have been published in newspapers, adapted a short story of France Kaffca into a modern Tamil play, and penned a play to commemorate the 50th year of Indian Independence.

  • அது ஒரு புனிதப் பொழுது

    அது ஒரு புனிதப் பொழுது

    சூரியன்
    பொழுதின் மடியில்
    தலை சாய்கிறான்
    நான் உன் மடியில்
    தலை வைத்திருக்கிறேன்.

    வானம்
    தேசத்தின் நெருக்கடி நிலையை
    நினைவூட்டுகிறது.
    "மழை வருமா?" என்கிறேன் நான்.
    "சாரலே அடிக்கிறது" என்கிறாய்
    ஆம்!
    உன் கண்களில் மின்னல்.

    நிர்வாணத்தைக்
    குடைகளாக்குகின்றோம்
    நம்முள்
    மழையடித்து ஓய்கிறது.

    அந்த அந்திக்கும்
    வெட்கம் போலும்
    இருட்டு முக்காட்டை
    இழுத்துப் போர்த்திக்கொள்கிறது.

    அது ஒரு புனிதப் பொழுது.

    - மகரந்தன்.

  • Every Day Every Movement

    Poets build poems with words
    In an orderly fashion
    Not for display alone
    But for registering
    Contemporary acts in society

    O! My love
    I too register
    Your every movement
    Every day.

    - Maharandan

  • கறுப்பு

    உன் தோலும்
    என் தோலும்
    ஒரே நிறம்தான்
    "கறுப்பு"

    உன் தொழிலும்
    என் தொழிலும்
    ஒரே மாதிரிதான்
    "அடிமைத் தொழில்"

    உன் ஊருக்கும்
    என் ஊருக்கும்
    ஒரே வித்தியாசம்தான்
    "பறைச் சேரி"
    "பள்ளிச் சேரி"

    தின்ன இலையில்
    பீ பேணவன் நீ என்றால்
    அதற்கும் அஞ்சி
    நகர்ந்து உட்கார்ந்தவன்
    நான்

    நகர்ந்து உட்கார்ந்தவனை
    அழித்தொழிப்பேன் என்றால்
    அதையே
    தின்னக் கொடுத்தவனை
    என்ன செய்வாய்?

    காற்றுக்கும் தெரியாமல்
    கழுவிக் கொள்வாயோ?

    - மகரந்தன்

  • நிழல்கள்

    ஓயாது வந்துபோகும்
    இந்தக் கொடுங்கனவிலிருந்து
    எப்படித் தப்புவது?

    - இங்கே
    நிழல்களின் நிலத்தில்
    நடந்து கொண்டிருக்கிறேன்.
    இங்கே அங்கேயென
    ஏகப்பட்ட குரல்கள்
    உருவமற்று.

    என் குரலை மட்டும்
    ஒருவரும் செவிமடுக்கவில்லை.
    அந்தக் குரல்கள் மட்டும்
    அத்தனை விளக்கமாய்
    எனக்குக் கேட்கின்றன.
    என் குரல் மட்டும் எவருக்கும்
    எட்டவில்லையே !

    பழகிய
    அதன் பெயரையும் சொல்லித்தான்
    ஓலமிட்டு அழைக்கிறேன்.

    பிறகு -
    நினைவுகளனைத்தும்
    பின்னோக்கி நகர . . . நகர. .
    மூளையின் பெருவலி
    குரல்களின் சத்தத்தை
    அதிகப்படுத்திக் கொண்டே
    இருக்கின்றது.

    நிஜங்களைத் தொலைத்த
    கொடுங்குரல்களின் ஊடாக
    உண்மையைக் காண எங்கே போவேன்?
    எப்படிக் காண்பேன்?

    தேடித்தேடித் தீர்ந்த பின்னர்
    இங்கே
    மறுபடியும்
    நிழல்களின் நிலத்தில்
    நடந்து கொண்டிருக்கிறேன்
    போகும் வழிதெரியாது.

    அனைத்துக் குரல்களும்
    ஆள் பிடிக்கும் ஆசையில்
    தனித்தனியாய் அலைந்து கொண்டிருக்கின்றன
    எந்த ஒரு பிடிப்புமின்றி.

    - மகரந்தன்

  • நீ காதலிக்கிறாய் என்றால் . .

    நீ
    என்னைக் காதலிக்கிறாய் என்றால்
    நீ ஏன் என்னை அழைக்கக் கூடாது ?
    எப்போதும் உன்னை
    கைப்பேசியில் அழைப்பது
    நானாகத்தான் இருக்க வேண்டுமா ?

    நீ
    என்னைக் காதலிக்கிறாய் என்றால்
    பிறகு நீ ஏன் என் கைகளைப்
    பற்றிக்கொள்ளக் கூடாது;
    நாம் வெளியே போகும் போதெல்லாம் ?

    நீ
    என்னைக் காதலிக்கிறாய் என்றால்
    பிறகு ஏன் மன்னிப்பு கேட்கிறாய்
    என்னைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டு.

    நீ
    என்னைக் காதலிக்கிறாய் என்றால்
    அருகில் செல்லும்
    அழகானப் பெண்களைக் காணும்போதெல்லாம்
    என் எதிரிலேயே
    உன் கண்களில் ஏன்
    காமம் கசிகிறது.

    நீ
    என்னைக் காதலிக்கிறாய் என்றால்
    என்னை ஏன் அடிமைப்படுத்த
    எண்ணுகிறாய்?
    நான் மாறவேண்டும் என்று
    ஏன் நிர்பந்திக்கிறாய்?

    ஏனென்றால். . . .
    நீ
    என்னைக் காதலிக்கவே இல்லை.
    ஆனால்
    அதை சொல்லத் தைரியமற்று தயங்குகிறாய்.

    நீ தயங்குவதைக் கண்டு
    என் மனம் புண்படுகிறது.

    நான்
    உண்மையை ஏற்றுக்கொள்வதைத் தவிர
    ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லை.

    நீ
    என்னைக் காதலிக்கிறாய் என்றால்.

    - மகரந்தன்

  • குருதியில் உறையும் வார்த்தை

    நான் பேசத்தொடங்கினேன்.
    முன்னேயிருந்தவர்களின்
    வார்த்தைகளை நிராகரித்தது போலவே
    யாரும் கேட்கவேயில்லை.

    புரிந்துகொள்வதற்கு
    முயற்சிக்காமல்கூட
    அவர்கள் இருந்திருக்கலாம்.

    அல்லது
    புரியாமல்கூட
    இருந்திருக்கலாம்.

    அல்லது
    அவர்கள் கேட்பதற்கு
    வேண்டிய சப்தம்
    எனது வார்த்தைகளில்
    இல்லாது இருந்திருக்கலாம்.

    எனது கூர்மென்கத்தி
    பேசத்தொடங்கியது.

    எனது
    ஒவ்வொரு வார்த்தையையும்
    சன்னமான சப்தத்தையும்
    சிறு அசைவையும்
    மெல்லிய கூச்சலையும்
    இங்கே அவர்கள்
    மிகத் தெளிவாகக்
    கேட்கத்தொடங்கினர்.

    இப்போதெல்லாம்
    எனது கத்தியின் சிறு படபடப்பைக்கூட
    என்னைவிட மிக விரிவாக
    புரிந்துகொள்கின்றனர்:
    அது மேற்கொள்ளும்
    சவாரியைக்கூட.

    எனவே
    நானும் இப்போதெல்லாம்
    கத்தி வழியே பேசுகிறேன்.
    எனது கத்தி
    எனக்காகப் பேசுகிறது
    சத்தமாக, தெளிவாக.

    நான்
    ஒவ்வொன்றைப் பற்றியும் பேச
    பேராசை கொள்கிறேன்.

    குருதியின் ஊடாக,
    கண்ணீரின் வழியாக
    நான் பேசும்போது
    வார்த்தைகளைத் தனியாக்கி
    எனது கத்தி
    என்னைக் கவனிக்கும்.
    பிறகு ...
    தகவலைப் பரிமாறும்.

    ஏனென்றால்
    அது...
    அதன் பேச்சை
    யார் கேட்கவிரும்புகிறார்களோ
    அவர்களுக்கானதாக மாறியிருக்கும்.

    - மகரந்தன்

  • முரண்களின் உயிர்ப்பு

    இன்று காலை
    அவளைப் பார்த்தேன்

    பனியில் குளித்த
    அதிகாலை ரோஜாச் செடிபோல்
    இருந்தாள்.

    அவள் வெட்கத்தோடும்
    புன்னகையோடும்
    என்னைப் பார்த்தாள்.
    அவளின் நேர்கொண்ட நோக்கு
    நேர்மையானது.

    அவள் ஒற்றைக் கூந்தலில்இருந்த ரோஜா
    கீழே வீழ்ந்தது.

    சட்டென அதை
    எடுக்கக் குனிந்தபோதுதான்
    கவனித்தேன்
    அவளுக்கு ஒரு கால் இல்லை.
    கட்டைக் கால்.

    என்னைக்
    கடக்கும்போது
    அழியாத அந்தப் புன்னகையை
    உதிர்த்துப் போனாள்.
    அது அர்த்தமுள்ளது.

    பெருங்குரலெத்து
    நான் புலம்பித் தீர்க்கும்போதெல்லாம்
    ஓ. . . என் பேரண்டமே !
    என்னை மன்னித்துவிடு
    எனக்கு இரண்டு கால்கள் உள்ளன.
    உலகம் என்னுடையது.

    பூங்கொத்து வாங்க
    நின்றேன்.

    கடைக்கார இளைஞன்
    வசீகரமானவனாக இருந்தான்.
    அவனது புன்னகை
    தன்னம்பிக்கைக்கு புதிய முகவரி.

    "நீங்கள் சற்று தாமதமாய் வந்திருந்தால்
    உங்கள் பொல்லாப்புக்கு
    ஆளாகியிருப்பேன்.
    இதுதான் கடைசி"
    என்று தந்தான்.
    அவன் வார்த்தைகளில்
    மாய வித்தை இருந்தது.
    இன்னும் கொஞ்ச நேரம்
    பேசிக்கொண்டிருக்கலாம் என்றும்
    யாருக்கும் தோன்றும்.

    "நன்றி" சொல்லி
    நகரும் போது
    "நான்தான் உங்களுக்கு
    நன்றி சொல்ல வேண்டும்.
    உங்களைப் போன்றவர்களோடு
    பேசுவதே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
    பாருங்கள்
    நான் பார்வையற்றவன்"

    நெடுங்குரலெடுத்து
    நான் ஏங்கியழும்போது
    ஓ. . . என் பேரண்டமே !
    என்னை மன்னித்துவிடு
    எனக்கு இரண்டு கண்கள் உள்ளன.
    உலகம் என்னுடையது.

    வீதியில் இறங்கி
    நடந்து கொண்டிருந்தபோது
    நீலக்கண்களோடு
    ஒரு சிறுவனைக் கண்டேன்.

    அவன்
    பிற சிறுவர்கள் விளையாடுவதை
    வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
    ஒரு நிமிடம் நின்று
    அவனிடம் கேட்டேன்
    "நீ ஏன் அவர்களோடு சேர்ந்து
    விளையாடக்கூடாது"

    ஒரு வார்த்தையுமின்றி
    அவன்
    அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தான்
    பிறகுதான் தெரிந்தது
    அவனால்
    "கேட்க இயலாது" என்று.
    கேட்க இயலாதபோதும்
    அவன் பார்வையில்
    ஆழ்ந்த தெளிவு இருந்தது.

    கனத்த குரலெடுத்து கண்ணீர் விட்டு
    குறைகளைச் சொல்லி
    நான் அழும்போதெல்லாம்
    ஓ. . . என் பேரண்டமே !
    என்னை மன்னித்துவிடு
    எனக்கு இரண்டு காதுகள் உள்ளன.
    உலகம் என்னுடையது.

    முரண்களில் உயிர்க்கிறது வாழ்க்கை.

    - மகரந்தன்

About me
vallinammaharandan@blogspot.com
Recent comments

No comment yet...

Calendar
<< < July 2008 > >>
Mo Tu We Th Fr Sa Su
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31
Recently listened on Last.fm

Please configure your last.fm widget.

Footer:

The content of this website belongs to a private person, blog.co.uk is not responsible for the content of this website.