Search blog.co.uk

Posts archive for: 3 July, 2008
  • நீ காதலிக்கிறாய் என்றால் . .

    நீ
    என்னைக் காதலிக்கிறாய் என்றால்
    நீ ஏன் என்னை அழைக்கக் கூடாது ?
    எப்போதும் உன்னை
    கைப்பேசியில் அழைப்பது
    நானாகத்தான் இருக்க வேண்டுமா ?

    நீ
    என்னைக் காதலிக்கிறாய் என்றால்
    பிறகு நீ ஏன் என் கைகளைப்
    பற்றிக்கொள்ளக் கூடாது;
    நாம் வெளியே போகும் போதெல்லாம் ?

    நீ
    என்னைக் காதலிக்கிறாய் என்றால்
    பிறகு ஏன் மன்னிப்பு கேட்கிறாய்
    என்னைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டு.

    நீ
    என்னைக் காதலிக்கிறாய் என்றால்
    அருகில் செல்லும்
    அழகானப் பெண்களைக் காணும்போதெல்லாம்
    என் எதிரிலேயே
    உன் கண்களில் ஏன்
    காமம் கசிகிறது.

    நீ
    என்னைக் காதலிக்கிறாய் என்றால்
    என்னை ஏன் அடிமைப்படுத்த
    எண்ணுகிறாய்?
    நான் மாறவேண்டும் என்று
    ஏன் நிர்பந்திக்கிறாய்?

    ஏனென்றால். . . .
    நீ
    என்னைக் காதலிக்கவே இல்லை.
    ஆனால்
    அதை சொல்லத் தைரியமற்று தயங்குகிறாய்.

    நீ தயங்குவதைக் கண்டு
    என் மனம் புண்படுகிறது.

    நான்
    உண்மையை ஏற்றுக்கொள்வதைத் தவிர
    ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லை.

    நீ
    என்னைக் காதலிக்கிறாய் என்றால்.

    - மகரந்தன்

  • குருதியில் உறையும் வார்த்தை

    நான் பேசத்தொடங்கினேன்.
    முன்னேயிருந்தவர்களின்
    வார்த்தைகளை நிராகரித்தது போலவே
    யாரும் கேட்கவேயில்லை.

    புரிந்துகொள்வதற்கு
    முயற்சிக்காமல்கூட
    அவர்கள் இருந்திருக்கலாம்.

    அல்லது
    புரியாமல்கூட
    இருந்திருக்கலாம்.

    அல்லது
    அவர்கள் கேட்பதற்கு
    வேண்டிய சப்தம்
    எனது வார்த்தைகளில்
    இல்லாது இருந்திருக்கலாம்.

    எனது கூர்மென்கத்தி
    பேசத்தொடங்கியது.

    எனது
    ஒவ்வொரு வார்த்தையையும்
    சன்னமான சப்தத்தையும்
    சிறு அசைவையும்
    மெல்லிய கூச்சலையும்
    இங்கே அவர்கள்
    மிகத் தெளிவாகக்
    கேட்கத்தொடங்கினர்.

    இப்போதெல்லாம்
    எனது கத்தியின் சிறு படபடப்பைக்கூட
    என்னைவிட மிக விரிவாக
    புரிந்துகொள்கின்றனர்:
    அது மேற்கொள்ளும்
    சவாரியைக்கூட.

    எனவே
    நானும் இப்போதெல்லாம்
    கத்தி வழியே பேசுகிறேன்.
    எனது கத்தி
    எனக்காகப் பேசுகிறது
    சத்தமாக, தெளிவாக.

    நான்
    ஒவ்வொன்றைப் பற்றியும் பேச
    பேராசை கொள்கிறேன்.

    குருதியின் ஊடாக,
    கண்ணீரின் வழியாக
    நான் பேசும்போது
    வார்த்தைகளைத் தனியாக்கி
    எனது கத்தி
    என்னைக் கவனிக்கும்.
    பிறகு ...
    தகவலைப் பரிமாறும்.

    ஏனென்றால்
    அது...
    அதன் பேச்சை
    யார் கேட்கவிரும்புகிறார்களோ
    அவர்களுக்கானதாக மாறியிருக்கும்.

    - மகரந்தன்

  • முரண்களின் உயிர்ப்பு

    இன்று காலை
    அவளைப் பார்த்தேன்

    பனியில் குளித்த
    அதிகாலை ரோஜாச் செடிபோல்
    இருந்தாள்.

    அவள் வெட்கத்தோடும்
    புன்னகையோடும்
    என்னைப் பார்த்தாள்.
    அவளின் நேர்கொண்ட நோக்கு
    நேர்மையானது.

    அவள் ஒற்றைக் கூந்தலில்இருந்த ரோஜா
    கீழே வீழ்ந்தது.

    சட்டென அதை
    எடுக்கக் குனிந்தபோதுதான்
    கவனித்தேன்
    அவளுக்கு ஒரு கால் இல்லை.
    கட்டைக் கால்.

    என்னைக்
    கடக்கும்போது
    அழியாத அந்தப் புன்னகையை
    உதிர்த்துப் போனாள்.
    அது அர்த்தமுள்ளது.

    பெருங்குரலெத்து
    நான் புலம்பித் தீர்க்கும்போதெல்லாம்
    ஓ. . . என் பேரண்டமே !
    என்னை மன்னித்துவிடு
    எனக்கு இரண்டு கால்கள் உள்ளன.
    உலகம் என்னுடையது.

    பூங்கொத்து வாங்க
    நின்றேன்.

    கடைக்கார இளைஞன்
    வசீகரமானவனாக இருந்தான்.
    அவனது புன்னகை
    தன்னம்பிக்கைக்கு புதிய முகவரி.

    "நீங்கள் சற்று தாமதமாய் வந்திருந்தால்
    உங்கள் பொல்லாப்புக்கு
    ஆளாகியிருப்பேன்.
    இதுதான் கடைசி"
    என்று தந்தான்.
    அவன் வார்த்தைகளில்
    மாய வித்தை இருந்தது.
    இன்னும் கொஞ்ச நேரம்
    பேசிக்கொண்டிருக்கலாம் என்றும்
    யாருக்கும் தோன்றும்.

    "நன்றி" சொல்லி
    நகரும் போது
    "நான்தான் உங்களுக்கு
    நன்றி சொல்ல வேண்டும்.
    உங்களைப் போன்றவர்களோடு
    பேசுவதே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
    பாருங்கள்
    நான் பார்வையற்றவன்"

    நெடுங்குரலெடுத்து
    நான் ஏங்கியழும்போது
    ஓ. . . என் பேரண்டமே !
    என்னை மன்னித்துவிடு
    எனக்கு இரண்டு கண்கள் உள்ளன.
    உலகம் என்னுடையது.

    வீதியில் இறங்கி
    நடந்து கொண்டிருந்தபோது
    நீலக்கண்களோடு
    ஒரு சிறுவனைக் கண்டேன்.

    அவன்
    பிற சிறுவர்கள் விளையாடுவதை
    வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
    ஒரு நிமிடம் நின்று
    அவனிடம் கேட்டேன்
    "நீ ஏன் அவர்களோடு சேர்ந்து
    விளையாடக்கூடாது"

    ஒரு வார்த்தையுமின்றி
    அவன்
    அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தான்
    பிறகுதான் தெரிந்தது
    அவனால்
    "கேட்க இயலாது" என்று.
    கேட்க இயலாதபோதும்
    அவன் பார்வையில்
    ஆழ்ந்த தெளிவு இருந்தது.

    கனத்த குரலெடுத்து கண்ணீர் விட்டு
    குறைகளைச் சொல்லி
    நான் அழும்போதெல்லாம்
    ஓ. . . என் பேரண்டமே !
    என்னை மன்னித்துவிடு
    எனக்கு இரண்டு காதுகள் உள்ளன.
    உலகம் என்னுடையது.

    முரண்களில் உயிர்க்கிறது வாழ்க்கை.

    - மகரந்தன்

About me
vallinammaharandan@blogspot.com
Recent comments

No comment yet...

Calendar
<< < July 2008 > >>
Mo Tu We Th Fr Sa Su
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31
Recently listened on Last.fm

Please configure your last.fm widget.

Footer:

The content of this website belongs to a private person, blog.co.uk is not responsible for the content of this website.